தங்கம் கடத்திக் கொண்டு சென்ற இலங்கை பெண்கள் மூவர் பெங்களுர் விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பகுதி அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது இவர்களிடம் இருந்து 1.169 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாகூர் அடுமனி பாத்திமா(45), அயூப் பாத்திமா ரொசானா( 43), மொஹமட் இப்திகார் பஹ்மீடா(48) ஆகியோரை கைது செய்யப்பட்டனர் என்று தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஸ்ரீலங்கன் எயார் விமானத்தின் மூலம் பெங்களுருக்கு சென்றிருந்தனர்.
குறித்த மூவரும் சுங்க பரிசோதனை நிலையத்தை கடந்து சென்ற போதும், அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்களை மீண்டும் சோதனையிட்ட போதே தங்கக் கடத்தல் பிடிபட்டது.
இதில் இரண்டு பெண்கள் தமது சப்பாத்துக்களை கழற்றி எதனையோ எடுத்து கைப்பைகளில் வைத்தமையை அதிகாரிகள் கண்டுள்ளனர். இதனையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பெங்களுர் சுங்கப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.