வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய் : காதலனுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!!

4140

நாகர்கோவில்லில்..

இந்திய மாநிலமான தமிழகத்தில் இளம் காதல் ஜோடிகள் மின்விசிறியில் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கணவரை இழந்து தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் முத்துலெட்சுமி.



இவர் சம்பவத்தன்று துணிக்கடைக்கு வேலை சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது, வீடு திறந்துள்ள நிலையில், உள்ளே மின்விசிறியில் தனது மகள் உமா கவரி(21)யும், அவருடன் மற்றொரு இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியுள்ளனர்.

இதனை அவதானித்த தாய் கதறியழுத நிலையில், அக்கம்பக்கத்தினர் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, தந்தை இறப்பதற்கு முன்வரை குடும்பத்தோடு குமரி மாவட்டம் மருங்கூர் அருகே வசித்து வந்த நிலையில், அங்கு மோகன்(24) என்ற இளைஞருடன் உமாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.

பின்பு தந்தை இறந்த பின்பு வேறு இடத்திற்கு மாறிய நிலையில், மோகன் காதலியை மறக்காமல் மீண்டும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். உமா படிப்பை முடித்துவிட்டு, சூப்பர் மார்கெட்டில் வேலை செய்த நிலையில், குறித்த இளைஞர் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.