சிவனொளிபாத மலையிலிருந்து வழுக்கி விழுந்த 4 பேரில் ஒருவர் பலி!!(படங்கள்)

265

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற நான்கு பேரும் பாதையிலிருந்து வழுக்கி விழுந்ததில், ஒருவர் உயிரிழந்து மூவர் காயமடைந்துள்ளனர்.

சிவனொளிபாதமலை கொளுதென்ன மற்றும் இதிகட்டுபான பகுதிகளுக்கு இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாதையிலிருந்து வழுக்கி விழுந்து நான்கு பேரும் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் அம்பலாங்கொடையை சேர்ந்த 82 வயதான கே.டீ.உப்பதிஸ்ஸ என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் டிக்கோயா வைத்தியசாலையிலிருந்து கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரண விசாரணைக்காக உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 15 13 12 11