ஆசை காட்டி 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பல்!!

573

Abuseபுத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க சென்றிருந்த 14 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அக்மீமன, பட்டதுவ என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டதுவ பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதற்காக குறித்த சிறுமி சென்றிருந்தார்.

அப்போது அங்கு சென்றிருந்த இளைஞர்கள் சிலர் அந்த சிறுமி நட்புடன் பழகியுள்ளார். சிறுமி அழகாக இருப்பதால், புத்தாண்டு இளவரசி போட்டியில் கலந்து கொள்ளுமாறு இளைஞர்கள் சிறுமியிடம் கூறியுள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உடைகளை வாங்கி தருவதாக கூறி, இளைஞர்கள் அந்த சிறுமியை முச்சக்கர வண்டி ஒன்றில் காலி நகருக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து, நகரில் உள்ள விடுதியொன்று அழைத்துச் சென்று கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர், சிறுமியை நடு வழியில் விட்டுச் சென்றுள்ளனர். காலி மொரகொல்லவை சேர்ந்த சிறுமி சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.