இலங்கையில்..
இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி – இலங்கைப் பெண் சகுந்தலா. கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை என இலங்கைப் பெண் சகுந்தலா.
இலங்கை பெண்ணொருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்திக்க வந்து, அவரால் பேச முடியாதது குறித்து வேதனை தெரிவித்தார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்றைய தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் திரளாக வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்னை வந்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்த சகுந்தலா வாழ்த்து கூறி மகிழ்ந்தார். ஆனால் விஜயகாந்தால் பேச முடியாதது குறித்து அவர் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன்.
கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை. அவரை ஏன் பார்க்கணும் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய இலங்கை மக்களுக்கு உதவி செய்துள்ளார். இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி.
அதாவது நாங்கள் சொல்ல வேண்டிய விடயத்தை அவராக சொல்லிவிட்டார். அவரால் பேச முடியாது. பேச முடிந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோசம். ஆனாலும் நேரில் பார்த்துவிட்டு போட்டோ எடுத்துவிட்டு வந்துவிட்டோம்.
அவரை பார்த்ததே எங்களுக்கு பெரிய சந்தோசம். நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.