வவுனியாவில் பல பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாத்தீனியம் அழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)

447


யு .என் ஹபிடாட் அனுசரணையில் வவுனியா நகர சபை ஏற்பாட்டில் பாத்தினியம் அழிப்பு நடவடிக்கை ,வவுனியா மகாவித்தியாலய ,வவுனியா விபுலானந்தா ,வவுனியா பிரமண்டு மகாவித்தியாலய மாணவர்களால் இன்று (28.04) குருமண்காட்டில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திக்கு முன்னால் உள்ள மைதானத்தில் மேற்கொள்ள பட்டது .

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு ம.ச.பத்மநாதன், திரு சு.காண்டீபன் (உதவிமாவட்ட ஆணையாளர்- திரிசாரணர் ஊடகம் மற்றும் தொடர்புகள், தலைவர் மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கம்), திரு சி.ஆரூரன் (உதவி மாவட்ட ஆணையாளர், வவுனியா தெற்கு வலயம்) , மற்றும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க செயலாளர் ரோய் ஜெயக்குமார், வவுனியா நகரசபை ஊழியர்கள் செல்வேந்திரன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



1 2 3 4 5 6 7