யு .என் ஹபிடாட் அனுசரணையில் வவுனியா நகர சபை ஏற்பாட்டில் பாத்தினியம் அழிப்பு நடவடிக்கை ,வவுனியா மகாவித்தியாலய ,வவுனியா விபுலானந்தா ,வவுனியா பிரமண்டு மகாவித்தியாலய மாணவர்களால் இன்று (28.04) குருமண்காட்டில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திக்கு முன்னால் உள்ள மைதானத்தில் மேற்கொள்ள பட்டது .
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு ம.ச.பத்மநாதன், திரு சு.காண்டீபன் (உதவிமாவட்ட ஆணையாளர்- திரிசாரணர் ஊடகம் மற்றும் தொடர்புகள், தலைவர் மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கம்), திரு சி.ஆரூரன் (உதவி மாவட்ட ஆணையாளர், வவுனியா தெற்கு வலயம்) , மற்றும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க செயலாளர் ரோய் ஜெயக்குமார், வவுனியா நகரசபை ஊழியர்கள் செல்வேந்திரன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.