யாழில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முதலிடம் பிடித்த மாணவி!!

1778

செல்வி.கேசவன் உஷா..

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன, இம் முடிவுகளின் அடிப்படையில் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி மாணவியான உஷா கேசவன் கலைப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவருடைய தந்தையும், தாயும் போராட்டத்தில் இறுதிப்போர்க் களங்களில் போராடியதுடன் தந்தை வீரச்சாவடைந்த நிலையில் , அதே போர்க்களத்தில் போரிட்டுப் தாய் படுகாயமடைந்துள்ளார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முன்னுக்கு வந்த செல்வி.கேசவன் உஷாவிற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.