விளையாடிக் கொண்டிருந்த 11 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கியது எப்படி?

291

hangஅயல்வீட்டு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ, பண்டிருப்பு – மஹவத்த குடியிருப்பில் வசிக்கும் ரசிகா துலானி என்ற 11 வயதான சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (28) மாலை 4.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில், சிறுமி தனது இரட்டை சகோதரர் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று மாலை சிறுமி அயல்வீட்டு சிறுவர்களுடன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் அவர் தனது நண்பர்களை விட்டு விலகிச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் சிறிது நேரத்தில் சிறுமியை தேடிப் பார்த்தபோது வீட்டின் முன்னுள்ள அறை ஒன்றில் சிறுமி தூக்கிட்டு உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுமியின் சடலம் மாரவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கிடப்பட்டாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.