எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக அந்நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.