வவுனியாவில் திறந்து 4 நாட்களில் அகற்றப்பட்ட தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப்பலகை!!

1590

பண்டாரவன்னியன் சதுக்கம்..

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25.08.2022ம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்களே கடந்த நிலையில் நேற்று (29.08.2022) காலை குறித்த பெயர்ப்பலகையினை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அகற்றப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களிடம் வினாவிய போது,

குறித்த வீதி செப்பனிப்படும் பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூரான நிலையில் குறித்த பெயர்பலகை காணப்பட்டமையினால் அதனை நாம் அகற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையினரிடம் வினவிய போது, வீதி அபிவிருத்தி பணிக்காக பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளதுடன் பணிகள் நிறைவின் பின்னர் முன்னைய பெயர்ப்பலகையினை விட சிறப்பான ஓர் பெயர்பலகையினை அப்பகுதியில் வைப்பதற்குரிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றது என தெரிந்தும் அவசர அவசரமாக பெயர்ப்பலகையினை திறந்து 4 நாட்களில் பெயர்ப்பலகையினை அகற்றியமை மக்கள் மத்தியில் அதிர்ப்தியினை ஏற்படுத்தியுள்ளது.