வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்திகளை பெற்று சாதனை!!

1165


சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில்..



வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பல மாணவிகள் 3A சித்திகளை பெற்றுள்ளதுடன் பலர் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர்.

அதன் அடிப்டையில் வணிககப்பிரிவில் தெய்வகுமார் தனுஷ்கா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும் சுவேந்திரராசா டர்மிகா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும் பரமேஸ்வரன் வித்தககி 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும்,



ஜெயபிரகாஸ் யதுசா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும் பாஸ்கரன் லிருசிகா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன்,



கலைப்பிரிவில் போஜராஜன் றீவா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் , வரதராஜன் பவித்திரா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் சண்முகலிங்கம் சிவேதா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13இடத்தினையும் பெற்றதுடன் ,


தொழிநுட்ப பிரிவில் உயிரியர் தொழிநுட்பம் பிரிவில் பாஸ்கரன் சுகன்யா 3பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் புஸ்பதேவன் றோகிதா பி,2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும்,

பொறியியல் தொழிநுட்ப பிரிவில் ஜோன்சன் செரின் 3 சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் சந்திரசேகர் யுவேந்தினிகா பி,சி,எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும்,


விஞ்ஞானப்பிரிவில் கலைச்செல்வன் டிலக்ஷா 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 12வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.