வவுனியாவில் இரு வேறு இடங்களில் கொள்ளை!!

1096

Trittuவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்திருக்கும் பிரபல வர்த்தக நிலையம் மற்றும் கற்குழி பகுதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றிலும் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் இரவு (27.04) வவுனியா சந்தைசச் சுற்றுவட்ட வீதியில் அமைந்திருக்கும் பல்பொருள் வாணிபத்தின் கூரைகள் உடைக்கப்பட்டு பாபல்மா, சீனி, போன்ற விலையுயர்ந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளது அதேவேளை வவுனியா கற்குழி பகுதியிலும் வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றவேளை வீட்டின் கூரைகள் உடைக்கப்பட்டு மடிக்கணணிகள் மற்றும் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.

இதேபோன்று வீட்டு உரிமையாளர்கள் வீடுகளைவிட்டு வெளியிடங்களக்கு செல்லும் சந்தர்ப்பங்களை பயண்படுத்தியே திருடர்கள் வெற்றிகரமாக தமது திருட்டுக்களை மேற்கொள்வதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இருசம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.