லண்டனில் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கல்லூரி மாணவிகள் : அதிர்ச்சித் தகவல்!!

292

UK

உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 12200 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதில் 43 சதவீத மாணவிகள் அடங்குவர்.

கேம்பிரிட்ஜ் பல்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பாலியில் ரீதியாக துன்புறுத்தபட்டு வருவதாக புதிய ஆய்வொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சில மாணவிகள் தட்டுதடுமாறி பலாத்காரம் வரைக்கும் செல்வதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கபட்ட மாணவிகள் பொலிஸரிடம் முறைப்பாடு செய்ய தயக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

2000 பேரிடம் இது பற்றி தகவலக்ளை திரட்டிய போது, இது போன்ற புகழ்பெற்ற பல்கலைகழத்தில் இவ்வாறான சம்வங்கள் நடப்பது சர்வ சாதாரணம் என்று தெரிவித்துள்ளனர்.

ஒன்லைன் மூலம் பல்கலைகழகத்தை பற்றி கேட்டபோது, அங்கு நடக்கும் சம்வங்கள் உண்மை என்று 8.4 சதவீதத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகள் அங்கு பணிபுரியும் ஊழியர்களாலும் ஆய்வுக்கு படிக்கும் மாணவிகள் தங்களது ஆசிரியராலும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.

இதுபோன்ற புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற சம்வங்களால் புதிய கலச்சாரம் கல்வி சீரழிவை உண்டாக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 2010 ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் ஏழு சதவீதம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டுள்ளனர் என்று கண்டறியபட்டுள்ளது.

தேசிய மாணவர் சங்கம் சார்பில் நடத்தபட்ட ஆய்வில் 12 சதவீதம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறியபட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கழத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபோது இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தகுந்த கட்டுபாடுகள் மற்றும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கபட்டு வருகிறது.

இந்த பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு அவர்களுது உடமைகளுக்கும் பொருட்களுக்கும் அனைத்து வகையிலும் பல்கலைகழத்தில் சார்பில் பாதுகாப்பு வழங்கபட்டு வருகிறது. இது போன்ற சம்வங்கள் இந்த பல்கலைகழத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்று பல்கலைகழகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு உலகில் அதிகம் என்று தெரிவித்தார். மாணவிகள் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுகிறார்களா என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.