வவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த தப்பியோடிய கைதி!!

319

V1 V2

வவுனியாவில் பெண்ணைப் போன்று வேடமணிந்து சுற்றித் திரிந்த கைதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் ( 28) என்ற சந்தேகநபர், கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்க புலனாய்வுத் தகவலை அடுத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தேக நபர், ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.