திருகோணமலை சம்பூர் தமிழ் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!!

290

Missing

திருகோணமலை, சம்பூர் பாடசாலை மாணவிகள் மூவர் காணாமற்போன சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர், நோவூர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் நேற்று (29) பாடசாலை சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என பொலிஸில் மாணவிகளின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பூரைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிந்தா (16), தங்கராசா சங்கீதா (13) மற்றும் அழகராசா சரிதா (12) என்ற மூவரே காணாமற்போயுள்ளனர்.

இவர்கள் கடத்தப்பட்டுள்ளார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சினை காரணமாக காணாமற்போயுள்ளனரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை நேற்று காணாமற்போனநிலையில் மீண்டும் வீடு திரும்பிய 24 வயதுடைய பெண்ணிடம் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.