வடக்கு பிரதேசங்களுக்கான ஐந்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
பளை, வுவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான நெடுந்தூர ரயில் சேவைகளே ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் ஆசனங்களை முன் பதிவு செய்தவர்களுக்கான பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இன்று காலை வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயிலுடன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தின் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் திகதி குறிப்பிடப்படாமல் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.