வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு(படங்கள்)-2ம் இணைப்பு!!

352

வவுனியாவில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துவருகின்றது. இதனால் பல இடங்களில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தம்பனைவீதி, கல்லுமலைவீதி, மருக்காரம்பளை, கண்ணாட்டி, கணேசபுரம் கிராமம் முதலிய கிராமங்களிலேயே இவ்வாறு காற்றுடன் கூடிய அடைமழை பெய்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டதாக வவுனியா இடர் முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி எஸ். சூரியராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழையால் குடியிருப்புகளின் கூரைகள் சேதமடைந்து வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

இன்று காலை காலநிலை சீரடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிய அதேவேளை, வீடுகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டமையினால் சில குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இன் நிலையில் மீண்டும் இன்று மதியம் முதல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

-பாஸ்கரன் கதீசன், பண்டிதர்-

01 02 03 3 04 4 6 7