காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி : காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்!!

2461

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை அருகே முழையூர் மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் ரம்யா (வயது 28). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, அங்கு ஒரு பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்த நெல்லையை சேர்ந்த ஜோசப் மகன் குமார் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்துள்ளார்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது சொந்த ஊரில் தாயாருடன் வசித்து வந்த ரம்யா மயிலாடுதுறையில் உள்ள பேக்கரி ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால் தலையில் வெட்டியதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் ரம்யாவை கைது செய்தனர்.