
பொத்துஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஐவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் நிறைவடையும் வரை, பலாலி ரயில் எஞ்சின் சாரதி, அவரது உதவியாளர், பாதுகாவலர், சமிஞ்சை கட்டுப்பாட்டாளர் மற்றும் பொத்துஹெர ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய ஐவர் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.





