மின்வெட்டு நேரம் குறைப்பு : வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!!

538

மின்வெட்டு..

நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை 1 மணித்தியாலங்கள் மாத்திரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் வேளை ஒரு மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.