இலங்கையில் ஒரே நாளில் உயிரிழந்த தம்பதி :பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

698


உயிரிழந்த தம்பதி..



திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் வாழ்ந்த தம்பதியினர் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி – குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.



ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஆர்.ஏ.எஸ். ரணசிங்க (வயது – 88), மற்றும் அவரது மனைவி ஏ.ஜி.பண்டாரநாயக்க ( வயது – 81) ஆகிய இருவருமே இவ்வாறு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.




ரணசிங்க கடந்த 30.08.2022 காலையில் உயிரிழந்த நிலையில் , கணவரின் பிரிவால் கவலையுற்றிருந்த மனைவியியும் ஒரிரு மணிநேரத்துக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.


உயிரிழந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் உள்ளதாக கூறப்படும் நிலையில் , ஒரே நாளில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.