மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!!

588

மின்வெட்டு..

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 09 ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1 மணிநேரமாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.