இளைஞனின் வெறிச்செயலுக்கு பலியான மூன்று சகோதரர்கள் : சம்பவத்தில் முக்கிய திருப்பம்!!

548

அயர்லாந்தில்..

அயர்லாந்தின் Tallaght பகுதியில் சொந்த சகோதரர்கள் மூவரை கொடூரமாக கொலை செய்துள்ள 24 வயது இளைஞரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. குறித்த நபர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணையில் கொலை தொடர்பில் கருத்துக் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டப்ளின் நகரின் Tallaght பகுதியில் நாட்டையே உலுக்கும் கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது. இரவோடு இரவாக 18 வயதான Lisa Cash, அவரது 8 வயது இரட்டை சகோதரர்கள் Christy மற்றும் Chelsea Cawley ஆகியோரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் 24 வயதேயான Andy Cash.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கைதான Andy Cash மீது பொலிசார் திங்களன்று மதியத்திற்கு மேல், கொலை வழக்கு பதிந்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில், கொலை தொடர்பில் தாம் கருதேதும் தெரிவிக்க விரும்பவில்லை என Andy Cash கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மூன்று கொலை வழக்கு தொடர்பாக தனித்தனியாக குற்றப்பத்திரிகை நகலை அவருக்கு வழங்கியுள்ளனர். மேலும், கொலை வழக்குகளுக்கு மாவட்ட நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க முடியாது என்பதால், உயர் நீதிமன்றத்தை நாட வலியுறுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, வழக்கு விசாரணையின் பொருட்டு, காவலில் வைத்திருக்க பொலிசார் அனுமதி கோரப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.