பாடசாலைகளில் புதிய நடைமுறை : கல்வி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

778

பாடசாலைகளில்..

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் இனி பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹெரோயினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் சட்டவிரோத செயல் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். அத்துடன், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.