தமிதா அபேரத்ன..
இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்துவ சந்தி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கெதிராக ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.