திருமணம் முடிந்து 5 நாட்களில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

3335


தென்காசியில்..



தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.



இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.




இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


அதில், அப்பெண் அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி(23) என்பது தெரியவந்தது. இசக்கி செல்விக்கு கடந்த 1ம் தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார். உடனே அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளைஞரை அவர் திருமணம் செய்து கொண்டார்.


இதற்கு 2 வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இசக்கி செல்வி தனது கணவருடன் கடையம் அருகே கோவிலூத்து பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கொண்ட இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், தான் அவர் மறுநாள் ஓடையில் கொலைசெய்யப்பட்ட பிணமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நேற்றுமாலை இசக்கி செல்வியை ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரியவந்தது. அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.