வங்கி அட்டைகளை அபகரித்து மோசடி : மக்களே அவதானம்!!

431

மோசடி..

பலரை ஏமாற்றி அவர்களின் வங்கி அட்டைகளை அபகரித்து சுமார் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கடுவெல பொலிஸார் நேற்று (07.09) கைது செய்துள்ளனர்.

மல்வான பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை கைதான சந்தேக நபர் கடுவலை, நவகமுவ, மாலபே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிஎம் இயந்திரங்ளில்,

பணம் எடுக்க முற்பட்டபோதும் அது கைகூடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.