2வது திருமணத்தை மறைத்த அமலாபால் : உடைந்த ரகசியம் : ஆதாரத்தை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய கணவர்!!

452

அமலா பால்..

நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைந்து பொய் புகார் கூறிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலா பால் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது முன்னல் காதலர் பாடகர் பவ்நிந்தர் சிங் மீது போலீஸில் புகார் கொடுத்து அதிர விட்டிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் பாடகர் பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். ஆதாரத்தை காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இரண்டாவது கணவர் தற்போது அமலா பாலுக்கும், தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர் பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தன்னுடைய காதலர் குறித்தும், அவருடன் திருமணம் ஆனது குறித்தும் வெளியில் காட்டிக் கொள்ளாத அமலாபால், திருமணம் செய்தவர் மீது பாலியல் வழக்கு கொடுத்து அதிர வைத்துள்ளார்.

ஏற்கனவே பவ்நிந்தர் சிங் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது, அது போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது என அமலா பால் கூறினார்.

ஆனால் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் வாழாமல் பொய் புகார்களை கூறி வருவதாக தெரிவித்துள்ள பாடகர் பவ்நிந்தர் சிங், அமலா பால் தன்னை திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங்குக்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியுள்ளது.