தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை : விவாகரத்து குறித்து மனம் திறப்பு!!

564

நடிகை அஞ்சு..

பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற பேபி அஞ்சு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் வளர்ந்த பிறகு கேளடி கண்மணி, பாப்கார்ன், மிலிட்டரி, அபிராமி, மதயானை கூட்டம், இந்திர விழா போன்ற ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 1996ஆம் ஆண்டு விவாகரத்தையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். டைகர் பிரபாகர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தமிழிலும் அன்புக்கு நான் அடிமை, அன்னை பூமி, அண்ணாமலை, பாண்டியன், முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உள்பட 3 பேரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தான் நான்காவதாக அஞ்சுவை காதலித்து மணந்தார்.

டைகர் பிரபாகர் காதலித்த போது அவருக்கு வயது 17, டைகருக்கு வயது 48. தனது 52 ஆவது வயதில் 2001 ம் ஆண்டு டைகர் மரணமடைந்தார். இந்நிலையில் தன் வாழ்க்கை குறித்து பேசிய அஞ்சு, எனது தந்தை வயதில் இருந்தவரை காதலித்தேன்,

குடும்பத்தார் எதிர்ப்பை மீறி அவரை மணந்தேன், அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்து அவரது பிள்ளைகள் என்னை விட மூத்தவர்கள் என தெரிந்தது.

நான் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார்.