வெளிநாட்டில் தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பிய புதுமணப் பெண்ணுக்கு கணவர் வீட்டில் நேர்ந்த விபரீதம்!!

450

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் திருமணமான புதுமணப்பெண் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள கிடங்கம்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா(25). திருமணமான இவர் சில நாட்களில் கணவரை முறைப்படி விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ்(35) என்பவருக்கும், நிகிதாவுக்கும் கடந்த சூலை மாதம் திருமணம் நடைபெற்றது. அனீஷுக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருந்ததால் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

இதனால் திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதி வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கேயே தேனிலவு கொண்டாடியுள்ளனர். ஆனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு திரும்பிய நிலையில் நிகிதா நடத்தை மீது அனீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அனீஷ், நிகிதா இருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனைக் கேட்டு பயந்துபோன அனீஷ் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நிகிதா ரத்த வெள்ளத்தில் கிடைத்துள்ளார். அவரது அருகே ரத்தக்கறையுடன் அனீஷ் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக நிகிதா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிகிதா உயிரிழந்தார். பொலிஸார் அனீஷிடம் நடத்திய விசாரணையில், அவர் குத்துவிளக்கால் மனைவியை தலையில் பலமாக தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருமணமான பத்து நாளில் புதுமணப்பெண் கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.