திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : திரைத்துறையினர் அதிர்ச்சி!!

416

தூரிகை..

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை.

இந்த நிலையில் இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. முதல்கட்டமாக அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்போது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.