
சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சுவாதிக்கு இரண்டு மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் இறந்த சுவாதி ஆந்திராவைச் சேர்ந்த குண்டூரை சேர்ந்தவர். அவரது தந்தை ராமகிருஷ்ணன் ஒரு விவசாயி, தாய் காமாட்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சுவாதி இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன்-காமாட்சி தம்பதியினர், மற்ற உறவினர்களுடன் சென்னைக்கு வந்துள்ளனர்.
மேலும், குண்டுவெடிப்பில் பலியான சுவாதி ஐதராபாத்தில் எம்.டெக் படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







