மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற காதலன்… நின்றுபோன திருமணம்!!

1111

சென்னையில்..

தண்டையார் பேட்டையில் மணமகனிடம் தாலியை பறித்து மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தண்டையார் பேட்டை, நெடுஞ்சசெழியன் நகர், கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரேவதி(20). , நேதாஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (25).

இவர் மரைன் என்ஜினீயர். இவர்களுக்கு, பெரியோர்கள் சம்மதத்துடன், நான்கு மாதம் முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை, நேதாஜி நகர் முருகன் கோவிலில் இருவருக்கும். திருமணம் நடக்க இருந்தது.

இரு வீட்டாரும் கூடி இருந்தனர். முகூர்த்தம் 6 முதல் 7.30 மணி குறிக்கப்பட்டிருந்தது. மாலையில் வரவேற்பு நிகழச்சிகக்கான ஏற்பாடும் தடல் புடலாக நடத்த இருந்தன. முகூர்த்த நேரம் நெருங்கியது. மணிகண்டன் கையில் ஐயர் தாலி எடுத்து கொடுத்தார். அவர் ரேவதி கழுத்தில் கட்டுவதற்கு சென்றார்.

ரேவதியும் தலை குனிந்தபடி இருந்தார். அந்த நேரத்தில். வாலிபர் ஒருவர் மணமேடைக்கு பாய்ந்து மணிகண்டன் கையில் இருந்த தாலியை பறித்து அந்த தாலியை ரேவதி கழுத்தில் கட்ட முயற்சித்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆர்.கே நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் சதீஷ் (23) என தெரிந்தது. ரேவதி சதீஷ் கடை ஒன்றில் வேலை பார்த்தபோது, இருவரும் காதலித்ததாக தெரிகிறது.

ரேவதி வீட்டில் சொல்லாமல் மறைத்து விட்டார். திருமணத்திற்கு வந்த சதீஷ், ரேவதி தனக்கு தான் என இப்படி செய்துள்ளார். இந்த சம்பவத்தால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டனர்.