ஒரு வயது குழந்தைக்கு திருமணம் : 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!

741


ராஜஸ்தானில்..



1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கியது. திருமண வாழ்க்கையை தொடங்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால், சிறுமி நீதிமன்றத்தை நாடினார்.




வியாழக்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பிரதீப் குமார் மோடி, திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். தாத்தா இறந்த பிறகு, சிறுமிக்கு ஒரு வயது இருக்கும் போது கிராமத்து சிறுவனுடன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு திருமணத்தை நடத்தி முடிக்க உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.


ஆனால் செவிலியராக ஆசைப்படும் சிறுமி, தனது கனவுகளுக்கு உறவினர்கள் தடையாக இருப்பதாகக் கூறி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். திருமணத்திற்கு சிறுமி சம்மதிக்காததால், ஜாதி பஞ்சாயத்து, அவரது உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்டவும் உத்தரவிட்டது.

குழந்தை திருமண நடைமுறை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்றும், அதை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அந்தப் பெண் முன் வந்து தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.


செவிலியராக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் இனிமேல் அதில் கவனம் செலுத்துவேன் என்றும் அந்த பெண் மேலும் கூறினார்.  “இன்று எனது பிறந்தநாள். எனக்கு 21 வயதாகிறது. இந்த தீர்ப்பை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பிறந்தநாள் பரிசாக பார்க்கிறேன்” என்று சிறுமி கூறினார்.