வவுனியா மரக்காரம்பளையில் தும்பு தொழிற்சாலை திறந்து வைப்பு!!

1144


தும்பு தொழிற்சாலை..



வவுனியா மரக்காரம்பளை பகுதியில் தும்பு தொழிற்சாலை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (11.09.2022) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.



குறித்த நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.




தொழிற்சாலையின் பெயர்ப்பலகையினை பிரதம விருந்தினர் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் தொழிற்சாலையும் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி , கிராம சேவையாளர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , தொழிலதிபர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.