வவுனியாவில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதி தீப்பிடித்து முற்றாக சேதம்!!

1207

தீவிபத்து..

வவுனியா மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் மகா நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் வீதி அபிவிருத்தி பணிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் இன்று (12.09.2022) காலை 10.00 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனை அவதானித்த மக்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த உரிய தரப்பினரின் முயற்சியினால் விடுதியில் ஏற்பட்ட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

எனினும் தீப்பரவல் காரணமாக விடுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த விடுதியில் 30 ஊழியர்கள் தங்கியிருப்பதுடன் அவர்கள் விடுமுறையில் சென்றுள்ளமையினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் பல உடமைகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.