மனைவியை கொலை செய்துவிட்டு மாமனாருக்கு போன் போட்டு சொன்ன மருமகன்… மனைவி அழகாக இருந்தது ஒரு குற்றமா?

518

நிஜாமாபாத்தில்..

மனைவி அழகாக இருந்ததால் அடிக்கடி சந்தேகம் அடைந்த கணவன், ஒரு கட்டத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.

மனைவி அழகாக இருந்ததால் அடிக்கடி சந்தேகம் அடைந்த கணவன், ஒரு கட்டத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு அத்தனை பொருத்தங்கள் இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையே நம்பிக்கை இருக்கவேண்டும். அந்த பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போனால் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் ஏற்பட்டு ஒட்டு மொத்த வாழ்க்கையுமே சீர்குலைந்து விடும் என்பது அனுபவ மொழி.

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே எது வேண்டுமானாலும் வரலாம் சந்தேகம் மட்டும் வரக்கூடாது, அது வந்துவிட்டால் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே சீரழிந்து விடும் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

நிஜாமாபாத் நகரை சேர்ந்த சையது கலீம்மீன்மகள் அனீஸ் பாத்திமா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சையது சுல்தான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணம் ஆன சில வருடங்கள் இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது.

ஆனால் மனைவி பாத்திமா மிகவும் அழகானவர் என்பதால் மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதன் பேரில் அடிக்கடி மனைவியை அவர் துன்புறுத்தி வந்தார், அதே நேரத்தில் மாமியாருடடுனும் சலீம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

ஒருகட்டத்தில் கணவனின் சந்தேகத்தால் சோர்வடைந்த மனைவி அனீஸ் பாத்திமா, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் நிஜாமாபாத் மூன்றாவது டவுனுக்கு உட்பட்ட பேங்க் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். மனைவி தனியாக வீடு எடுத்தது கணவனுக்கு சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் சையது சுல்தான் தனது மாமனாருக்கு போன் செய்து குழந்தைகளை பார்க்கச் செல்வதாக கூறினார், அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்து, உங்கள் மகளை கொன்று விட்டேன் என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாத்திமாவின் தந்தை மற்றும் தாய் பாத்திமா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர், அப்போது அங்கு பாத்திமா கழுத்து அறுக்கட்டப்பட்ட நிலையில் அலங்கோலமாக கிடந்தார், பின்னர் அது குறித்து நகரின் மூன்றாவது டவுன் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், தனது மருமகனால் மகள் சந்தேகத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், மருமகன் தன் மகளை கழுத்து அறுத்து கொன்றதாகவும் போலீசில் புகார் செய்தார், அதன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சையது சுல்தானை தேடிவருகின்றனர்.