வவுனியாவைச் சேர்ந்த நால்வர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட போது மன்னாரில் கைது!!

419

A5

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நால்வர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – ஒலுத்துடாய் கடற்பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் வவுனியா – பம்பைமடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.