ஒரு மில்லியன் இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!!

594

இலங்கையர்கள்..

கடந்த 20 மாத காலப்பகுதிக்குள் ஒரு மில்லியன் இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 10 லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்ப பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இத்தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இவ் வருடம் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரையான,

காலப் பகுதிக்குள் 1,013,992 இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர். அதேவேளை இக்காலப் பகுதிக்குள் 1,050,024 இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.