உலகில் முதல் முறையாக நடந்தேறிய அதிசய சம்பவம்!!

400

உலகில் முதல் முறையாக 96 சதவீத தீக்காயத்திற்கு பின்பு பெண்மணி ஒருவர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் நார்த் வேல்ஸில் உள்ள ரெக்ஸ்ஹெம் மாகாணத்தை சேர்ந்தவர் கேட்ரீன் பக் (20). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரெஞ்சு அல்ப்ஸ் மலையில் பேருந்து மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கினார். இதனால் அவர் தலை முடி மற்றும் கால் பாதத்தை தவிர உடம்பு முழுவதும் 96 சதவீதம் எரிந்தது.

இதனால் கேட்ரீன் மூன்று மாதங்கள் கோமாவில் இருந்தார். தற்போது 200க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பின் கேட்ரீன் உயிருடன் திரும்பியுள்ளார்.

சிகிச்சையில் செயற்கையாக வளர்த்த தோலை வைத்து அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 1 million பவுண்ட்ஸ் செலவாகியுள்ளது.

இதுகுறித்து கேட்ரீன் கூறுகையில், தான் குணம் அடைய போவதில்லை, இனி எந்த எதிர்காலமும் இல்லை என நினைத்ததாகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அற்புதமான ஆதரவால் உயிர் பிழைத்தாக தெரிவித்துள்ளார்.

F1 F2 F3 F4