திருமணமான 4 மாதத்திலேயே இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

361

ஈரோடில்…

ஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி 4 மதமே ஆன நிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து.

ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு விஷ்ணு பாரதி என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத பாட்டியைப் பார்ப்பதற்காக இந்து வந்துள்ளார். பின்னர், நேற்று வீட்டில் தனது அறைக்குச் சென்ற இந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், ஹீலியம் வாயுவை பிளாஸ்டிக் கவருக்குள் செலுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதேபோல் ஹீலியம் வாயு சிலிண்டரை ஆன்லைனில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி நான்கு மாதத்திலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.