கிளிநொச்சியில் 29 பிள்ளைகளுக்கு ஒரே மேடையில் மஞ்சள் நீராட்டு விழா : பலரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு!!

1281

கிளிநொச்சி..

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பிள்ளை செல்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. உலகப் பரப்பில் இது ஓர் உன்னத நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

29 மங்கையருக்கு பருவ மஞ்சள் நீராட்டு விழா
இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும் தவறவிடாது இருபத்தொன்பது(29) மங்கையருக்கு மங்கைப் பருவ மஞ்சள் நீராட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த நிகழ்வினை முன்னின்று நடாத்தியவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.