நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!!

687


மின்வெட்டு..



மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(20.09) மற்றும் நாளை மறுதினம்(21.09) ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாலை 6 மணி தொடக்கம் 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இன்றுவரை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நாளை முதல் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.