4 ஆண்டுகளாக குழந்தை இல்லை… தம்பதி எடுத்த விபரீத முடிவு..!

338

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த சூலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (32) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா (24). இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் குழந்தை பாக்கியம் இல்லை.

குழந்தை வேண்டி நீண்ட நாட்களாக ஏங்கி தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல உணவருந்திவிட்டு தம்பதி தூங்க சென்றனர். காலை வெகுநேரம் ஆகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.

அப்போது, கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனே சிக்கபள்ளாப்பூர் ஊரக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

கதவுடைத்து உள்ளே சென்ற போலீசார் இருவரது உடல்களையும் கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக சிக்கபள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தம்பதி இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சரியாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாகவும், அதனால்கூட தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.