வவுனியா -செட்டிகுளம் தட்டான்குளத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய தமிழ் கல்வி அகடமி!!(படங்கள்)

333

வவுனியா, செட்டிகுளம் தட்டான்குளம் ,கந்தசாமிநகர் கிராமங்களில் தந்தையை இழந்த 40 பிள்ளைகளுக்கு தட்டான்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம் ஆகியவை தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தமிழ் கல்வி அகடமி நிறுவனத்தினரால் 27.04.2013 அன்று கற்றல் உபகரணங்கள் தட்டான்குளம் பொது நோக்கு மண்டபத்தில் வைத்து தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ) தட்டான்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொ.ராஜரத்தினம் ,மீள்எழுச்சி சமுக வளவாளர் இந்துஜா உட்பட பெற்றோர்கள் பலர்கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8