தடயத்தை அழித்தது ஏன்? நடிகை தீபா தற்கொலையில் புதுத் தகவல்!!

388

சென்னையில்..

சினிமா நடிகை தீபா தற்கொலையில் , அங்கிருந்த தடயத்தை அழித்தது ஏன் எனவும், தயாரிப்பாளர் சிராஜிதீன் சொல்லி, ஆண் நண்பர் செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை விறுவிறுக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய தகவலாக தீபாவின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். ஆந்திராவை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா(19).

இவர், சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை பூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடைசியாக வாய்தா படத்தில் தீபா கதாநாயகியாக நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் நாயகியாக வளம் வந்த தீபா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று , வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தீபா, நான்கு செல்போன்கள் பயன்படுத்தி உள்ளார்.

அதில் ஒன்று ஐபோன், அது மாயமாகி விட்டது. மற்ற மூன்று செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால், அதில் எந்தவித துப்பும் துலங்கவில்லை. தற்கொலைக்கு முன் தீபா எழுதியதாக கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

ஆனால், அந்த கடிதத்திலும், நான் ஒருத்தரை காதலித்தேன், அவர் காதலை ஏற்கவில்லை , அதனால், நான் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என தான் இருந்தது. இந்த நிலையில் போலீசார் துப்பு துலக்கியதில், சினிமா தயாரிப்பாளர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிராஜிதீன் என்பவர் தான் தீபாவின் காதலனாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

மாயமான ஐபோனின், சிம்கார்டு நம்பரை வைத்து, போலீசார் கால் ஹிஸ்ட்ரியை சேகரித்தனர். அதில் தீபா, கடைசியாக சிராஜிதீனிடம் வாக்கு வாதம் செய்து பேசிய உரையாடல் இருந்தது. இந்த அடிப்படையில் தான், சிராஜீதினை விசாரிக்க, அவரின் செல்போனில் தொடர்புக்கொண்டபோது, காரைக்குடியில் பட வேலையில் இருப்பதாக தெரிவித்தார்.

போலீசார் முறைப்படி, அவரின் வீட்டுக்கு சென்று சம்மன் வழங்கி உள்ளனர். காரைக்குடியில் இருந்து, சிராஜிதீன் கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இன்று இரவு வந்து விடுவார் எனவும், நாளை நேரில் ஆஜராகி, போலீசாரிடம் விளக்கம் அளிப்பார். அப்போது தான் தீபாவின் தற்கொலைக்கான காரணம் முழுவதும் தெரியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தீபாவின் சகோதரர் ரமேஷ், தீபாவின் மரணம் சந்தேகமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தீபா கடைசியாக , தனது ஐபோனில், சிராஜிதீனிடம் கோபமாக பேசி, நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அதோடு, அவரின் ஐ போனும் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.

தீபாவின் ஆண் நண்பர் பிரபாகர், அவர், சிராஜிதீனுக்கும் பழக்கம் ஆனவர். தீபா கோபமாக பேசியதையும், அவர் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக கூறியதையும், பிரபாகரிடம், சிராஜிதீன் தெரிவித்துள்ளார். அவரும், தீபா வீட்டிற்கு அன்று பதட்டத்துடன் வந்தார். இந்த வீடியோ காட்சி வெளியானது.

தீபா வீட்டிற்கு சென்ற பிரபாகர், அங்கு தீபா தூக்கில் பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, சிராஜிதீனுக்கு அவர் தன்னுடையை செல்போன் மூலம் தகவல் தந்தார். அதன் பிறகே, அந்த ஐபோன் மாயமானது.

20 நிமிடம் கழித்து தான், பிரபாகர் , கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கூறியதாக தெரிகிறது. அங்கிருந்த தடயங்களை அவர் அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆரம்பத்திலேயே, பிரபாகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால், சிராஜிதீன் தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக எண்ணிய போலீசார், பிரபாகரை விசாரிக்காமல் இருக்கிறது.

சிராஜிதீன் சொல்லி, பிரபாகர், அங்கிருந்த தடயத்தை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிராஜிதீன் ஆஜராகும் பட்சத்தில், தீபாவின் மர்ம மரணம் முடிச்சு அவிழும் என தெரிகிறது.