விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

479

ஈரோடில்..

ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர்.

இதில் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வரும் அபினேஷ் வழக்கம்போல் நேற்று பள்ளி முடிந்து அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீடு கட்ட தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்ததை பார்க்காமல் அதில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.