குண்டும் குழியுமான சாலையில் புகைப்படம் எடுத்த மணப்பெண் : ஏன் தெரியுமா?

590

கேரளாவில்..

பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் ஸீஜீஷா(23). இன்று காலை இவருக்கு திருமணம் நடைபெற்றது.

திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், அந்த சாலையில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குண்டும் குழியுமான சாலையில் நின்று மணப்பெண் ஸீஜீஷா எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.