போண்டா மணி..
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அவர் இதுகுறித்து பேசுகையில், “நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும்.
மேலும், இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்” என அந்த வீடியோவில் பெஞ்சமின் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.
#Watch | இரு கிட்னியும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவ நடிகர் பெஞ்சமின் கோரிக்கை #SunNews | #BondaMani | #Benjamin pic.twitter.com/gD4QvnWewc
— Sun News (@sunnewstamil) September 21, 2022