திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை : ஆரம்பிக்கும் போதே முறிந்த உறவு!!

557

ரக்சனா நாராயணன்குட்டி..

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் சென்ற விவகாரம் குறித்து முதல் முறை மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டி மனம் திறந்து பேசியுள்ளார்.

அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரக்சனா நாராயணன்குட்டி என்பவர் மலையளத்தில் பிரபல இயக்குனராகவும், கதா நாயகியாகவும் வளம் வருகின்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘அய்ன்’ என்கிற மலையாளப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரக்சனா நாராயணன்குட்டி அறிமுகமானர். கடந்த 2011 பெப்ரவரி மாதம் அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரியவர்களினால் நிச்சயக்கப்பட்டது.

திருமணம் ஆகி ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது விவாகரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக நடிகை ரக்சனா நாராயணன்குட்டி தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.